ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; குற்றவாளிகள் நாடாளக்கூடாது - நடிகர் கமல்ஹாசன்


ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; குற்றவாளிகள் நாடாளக்கூடாது - நடிகர் கமல்ஹாசன்
x
தினத்தந்தி 19 Nov 2017 3:20 PM GMT (Updated: 19 Nov 2017 3:20 PM GMT)

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான் என நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.


சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story