ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய வாகனம்


ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய வாகனம்
x

ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

புதிய தீயணைப்பு வாகனம்

ஈரோடு மாவட்டத்தில் 11 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் தலைமை அலுவலகமாக ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 பெரிய தீயணைப்பு வாகனங்களும், 2 சிறிய தீயணைப்பு வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது. இந்த வாகனங்கள் சாதாரண தீ விபத்துகள் ஏற்பட்டால் அணைப்பதற்கும், ஆயில், பெயிண்ட் நிறுவனம், டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டாலோ அதற்கென தனியாக நுரை தளர்வு வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு தலைமை தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதலாக ஒரு வாகனம் வாங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தயாரிக்கப்பட்ட இந்த தீயணைப்பு வாகனத்தில் அனைத்து உதிரி பாகங்களும் பொருத்தப்பட்டு, அங்கிருந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

நுரை கலவை

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, 'புதிய வாகனம் அனைத்து நவீன வசதிகளை உள்ளடக்கியது. பழைய வாகனங்களில் 4 ஆயிரத்து 500 லிட்டர் மட்டுமே நீரை தேக்க முடியும். ஆனால் புதிய வாகனத்தில் 5 ஆயிரத்து 500 லிட்டர் நீரை தேக்கி வைக்க முடியும். இதில் டவர் மாஸ் லைட் உள்ளது. மின்சார வசதி இல்லை என்றாலும் இந்த லைட் மூலம் மீட்பு பணிகளை இரவு நேரத்தில் துரிதமாக செய்ய முடியும்.

மேலும் இதில் தீ விபத்தை தடுக்க தண்ணீர் மட்டுமின்றி நுரை கலவையும் 300 லிட்டர் வரை தேக்கும் வசதி உள்ளது. பழைய வாகனத்தில் பம்ப்-ஐ தீயணைப்பு வீரர்கள் பொருத்த வேண்டும். ஆனால் புதிய வாகனத்தில் பம்ப் உள்ளிட்ட மீட்பு வாகனத்தின் அனைத்து பகுதிகளையும் வாகன டிரைவரே இயக்கிட முடியும். இந்த புதிய வாகனம் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்' என்றனர்.


Next Story