ஈரோடு மாநகர் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்


ஈரோடு மாநகர் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
x

ஈரோடு மாநகர் பகுதியில், தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில், தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள கடைவீதிகளில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு போன்ற பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் திருடர்கள் ஈடுபட அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருவார்கள்.

கண்காணிப்பு கோபுரம்

அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், மாநகர் பகுதியில் தற்போது கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

'மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, பிரப்ரோடு, மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, ஆர்.கே.வி ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா உள்பட 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளன. இன்னும் ஒருசில நாட்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள்' என்றனர்.


Next Story