கோவை அணி 3–வது வெற்றி; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது


கோவை அணி 3–வது வெற்றி; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
x
தினத்தந்தி 14 Aug 2017 11:15 PM GMT (Updated: 14 Aug 2017 8:25 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் நேற்று இரவு நடந்த கடைசி (28–வது) லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்–கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

திருச்சி வாரியர்ஸ் அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியுடன் கோவை அணி களம் கண்டது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிலேஷ் சுப்பிரமணியன் 57 ரன்னும், கோசிக் 43 ரன்னும் எடுத்தனர். கோவை அணி தரப்பில் ஹரிஷ்குமார் 4 விக்கெட்டும், விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய கோவை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூர்ய பிரகாஷ் 30 ரன்னும், அனிருத் சீத்தாராம் 44 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரோகித் 17 ரன்னுடனும், அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் 34 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 3–வது வெற்றியை ருசித்த கோவை அணி அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது.


Next Story