இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் 5 புதுமுக வீரர்கள்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் 5 புதுமுக வீரர்கள்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 23 Sep 2017 7:06 PM GMT)

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் நடைபெறுகிறது.

லாகூர்,

முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் வருகிற 28-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி துபாயில் அக்டோபர் 6-ந் தேதியும் தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

சீனியர் வீரர்களான மிஸ்பா உல்-ஹக், யூனிஸ்கான் ஆகியோர் மே மாதத்தில் ஓய்வு பெற்றதால் புதுமுக வீரர்கள் அதிகமாக அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்சா, இடக்கை சுழற்பந்து வீச்சாளர் முகமது அஸ்ஹர் அறிமுக வீரர்களாக தேர்வாகியுள்ளனர். உஸ்மான் சலாலுதீன், ஹரிஸ் சோகைல், பிலால் ஆசிப் ஆகியோர் ஒருநாள் போட்டியில் ஆடியவர்கள். ஆனால் டெஸ்ட் அணிக்கு அவர்கள் புதுமுக வீரர்கள் ஆவர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:- அசார் அலி, ஷான் மசூத், சமி அஸ்லாம், பாபர் அசாம், ஆசாத் ஷபிக், ஹாரிஸ் சோகைல், உஸ்மான் சலாலுதீன், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, முகமது அப்பாஸ், மிர் ஹம்சா, யாசிர் ஷா, பிலால் ஆசிப், முகமது அஸ்ஹர்.

Next Story