முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்பு


முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Nov 2017 10:30 PM GMT (Updated: 18 Nov 2017 7:04 PM GMT)

இலங்கையில் அடுத்த ஆண்டு நடக்கிறது: முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்கின்றன.

கொழும்பு,

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அங்கு முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கொழும்பில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Next Story