இப்படியும் அவுட் ஆவாங்களா? இலங்கை வீரருக்கு இரண்டாண்டுகள் விளையாட தடை


இப்படியும் அவுட் ஆவாங்களா? இலங்கை வீரருக்கு இரண்டாண்டுகள் விளையாட தடை
x
தினத்தந்தி 22 Nov 2017 5:21 AM GMT (Updated: 22 Nov 2017 5:21 AM GMT)

உள்ளூர் போட்டியில் வித்தியாசமாக அவுட்டான இலங்கை வீரர் சமர சில்வாவுக்கு இரண்டாண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் மெர்கண்டைல் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் எம்.ஏ.எஸ் யுனிசிலா மற்றும் டீஜய் லங்கா அணிகள் மோதின.இதில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமர சில்வா, ஸ்டெம்பிற்கு முன் நின்று ஆடாமல், பவுலர் பந்து வீச அருகில் வந்தபோது ஸ்டெம்பிற்கு பின்புறம் சென்று பந்தை அடிக்க முயன்றார்.ஆனால் பந்துவீச்சாளர் சரியாக பந்தை ஸ்டெம்பிற்கு போட்டு அவுட்டாக்கினார்.இப்படி தேவையில்லாத முறையில் விளையாட முயன்ற சமர் சில்வா இரண்டாண்டுகள் கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Next Story