4 வகையான போட்டிகளுக்கான இந்திய அணி இன்று தேர்வு எஞ்சிய இலங்கை தொடரில் கோலிக்கு ஓய்வு


4 வகையான போட்டிகளுக்கான இந்திய அணி இன்று தேர்வு எஞ்சிய இலங்கை தொடரில் கோலிக்கு ஓய்வு
x
தினத்தந்தி 26 Nov 2017 8:30 PM GMT (Updated: 26 Nov 2017 8:20 PM GMT)

எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் நாக்பூரில் இன்று கூடி 4 வகையான இந்திய அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

நாக்பூர்,

எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் நாக்பூரில் இன்று கூடி 4 வகையான இந்திய அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள். டெல்லியில் வருகிற 2–ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட், அதைத் தொடர்ந்து நடக்கும் அந்த அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளுக்கு தனித்தனியாக இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து இடைவிடாது விளையாடி வரும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு எஞ்சிய இலங்கை தொடருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அதனால் கடைசி டெஸ்டில் இந்திய அணியை ரஹானே வழிநடத்துவார். இதே போல் இலங்கை உடனான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று தெரிகிறது.

தென்ஆப்பிரிக்க தொடருக்கு இந்திய அணியில் 17 பேர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதால் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படலாம்.


Next Story