கோலி–அனுஷ்கா தம்பதிக்கு 2–வது முறையாக திருமண வரவேற்பு
கிரிக்கெட் வீரர் கோலி– அனுஷ்கா தம்பதிக்கு 2–வது முறையாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நேற்றிரவு நடந்தது.
மும்பை,
இதன்படி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கான திருமண வரவேற்பு டெல்லியில் கடந்த 21–ந்தேதி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்தினார்.
இந்த நிலையில் 2–வது முறையாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு தடபுடலாக நடந்தது. இதையொட்டி 300 சிறப்பு விருந்தினர்கள் வரை அமரக்கூடிய அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.
அஸ்வின், புஜாரா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, பும்ரா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேரில் வந்து புதுமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விக்கெட் கீப்பர் டோனி, தனது மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் வந்திருந்தார். இதே போல் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் பயிற்சியாளர் கும்பிளே, முன்னாள் வீரர் ஷேவாக், பேட்மிண்டன் மங்கை சாய்னா நேவால், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்தி நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விழாவை சிறப்பித்தனர்.Related Tags :
Next Story