அங்கோலாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் இடையே நெரிசல்: 17 பேர் பலி


அங்கோலாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் இடையே நெரிசல்: 17 பேர் பலி
x
தினத்தந்தி 11 Feb 2017 6:44 AM GMT (Updated: 11 Feb 2017 6:44 AM GMT)

அங்கோலாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் ரசிகர்கள் 17 பேர் பலியாகினர்.

யுஜி:

ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் யுஜி நகரில் கால்பந்து லீக் போட்டி நடந்தது.  8 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.  மைதானத்திற்குள் முதலில் புகுந்து இடம் பிடிப்பதற்கு ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு உள்ளே சென்றனர். மைதானம் திறக்கபட்டதும் உள்ளே ஒரே நேரத்தில் அனைவரும் செல்ல முற்பட்டதில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பலர் சிக்கி கீழே விழுந்தனர். 

இந்த சம்பத்தில் நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. எனவே பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இச்சம்பவத்துக்கு அங்கோலா அதிபர் ஜோஸ் எடுயார் டோதாஸ் சான் டோஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


Next Story