ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி
x
தினத்தந்தி 10 Dec 2017 7:57 PM GMT (Updated: 10 Dec 2017 7:57 PM GMT)

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி.யுடன் மோதியது. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் பந்தை கடத்துவதிலும், ஷாட் அடிப்பதிலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்திய போதிலும் 60-வது நிமிடத்தில் செய்த தவறு, ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. மும்பை வீரர் பல்வந்த் சிங்கை, கோல் பகுதியில் வைத்து சென்னை வீரர் தள்ளிவிட்டதால் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பில் மும்பை வீரர் ஆசிலி எமானா கோல் போட்டார். முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை பெற்றது. 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் புனே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-யை வீழ்த்தி 3-வது வெற்றியை சுவைத்தது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய ஜாம்ஷெட்பூருக்கு இது முதல் தோல்வியாகும்.

Next Story