இந்திய ஆக்கி வீரர் ரகுநாத் ஓய்வு பெறுகிறார்


இந்திய ஆக்கி வீரர் ரகுநாத் ஓய்வு பெறுகிறார்
x
தினத்தந்தி 31 July 2017 9:45 PM GMT (Updated: 31 July 2017 7:20 PM GMT)

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான ரகுநாத் கடந்த 8 மாதங்களாக இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

சென்னை,

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான ரகுநாத் கடந்த 8 மாதங்களாக இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் ஆக்கி பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் 28 வயதான ரகுநாத் விரைவில் சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘எனது ஓய்வு குறித்து இன்னும் சில மாதங்களில் அறிவிப்பேன். இந்திய அணி இளம் வீரர்களுடன் சரியான திசையில் பயணித்து வருகிறது. சர்வதேச போட்டியில் இருந்து விலக இது சரியான நேரம் என்று கருதுகிறேன். இதற்காக நான் மனதளவில் தயாராகி விட்டேன். விரைவில் இது தொடர்பாக பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ்சுடன் பேசுவேன். கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற நினைத்து இருந்தேன். ஆனால் அதனை கைவிட்டு தொடர்ந்து விளையாடினேன். 10 வருடங்களுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறேன். ஓய்வு பெறுவதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story