சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் வெற்றி


சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் வெற்றி
x
தினத்தந்தி 23 Feb 2017 10:30 PM GMT (Updated: 23 Feb 2017 7:24 PM GMT)

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

இதன் வெல்டர் வெயிட் பிரிவில் 2–வது சுற்று பந்தயத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் மனோஜ்குமார், பல்கேரியா வீரர் ராபர்ட் சமாசன்யத்தை தோற்கடித்து கால்இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2–வது சுற்று பந்தயத்தில் இந்திய வீரர் அமித் பான்கல் (49 கிலோ பிரிவு) அர்மேனியா வீரர் காஸ்பரை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு இந்திய வீரர் தாமஸ் (64 கிலோ), போலந்து வீரர் லூகாஸ்சை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்திய வீரர்கள் சதீஷ்குமார் (91 கிலோ), மனிஷ் பன்வார் (81 கிலோ) ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.


Next Story