ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஒரே பிரிவில் பெடரர், சிலிச்


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஒரே பிரிவில் பெடரர், சிலிச்
x
தினத்தந்தி 9 Nov 2017 9:00 PM GMT (Updated: 9 Nov 2017 8:47 PM GMT)

டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிசுற்று என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை மறுதினம் தொடங்கி 19–ந்தேதி வரை நடக்கிறது.

லண்டன்,

டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிசுற்று என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை மறுதினம் தொடங்கி 19–ந்தேதி வரை நடக்கிறது. குலுக்கல் மூலம் வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி போரிஸ் பெக்கர் அணி பிரிவில் 2–ம் நிலை வீரரும், 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும், பீட் சாம்ப்ராஸ் அணிப்பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.


Next Story