பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி


பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி
x

image courtesy: Barcelona Open Banc Sabadell twitter

நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பார்சிலோனா,

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றும் ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரும், 12 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 7-5, 6-1 என்ற நேர் செட்டில் 11-ம் நிலை வீரர் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) விரட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான கேஸ்பர் ருட் (நார்வே) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்சாண்ட்ரே முல்லரை (பிரான்ஸ்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story