வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சி


வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சி
x

காரைக்காலில் நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி நிலைய அதிகாாிகளுக்கு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது.

காரைக்கால்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. காலையில் நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்கும், மதியத்துக்கு மேல் காரைக்கால் (வடக்கு), காரைக்கால் (தெற்கு) மற்றும் நிரவி-திருப்பட்டினம் தொகுதிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ஜான்சன் தொடங்கி வைத்தார். இதில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் குறித்து வாக்காளர் பதிவு அதிகாரி சச்சிதானந்தன், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் பொய்யாதமூர்த்தி, மதன்குமார், செல்லமுத்து, சண்முகசுந்தரம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இந்த முகாமில் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வாக்காளர் திருத்தப்பணி மேற்கொள்வதற்கான புத்தகம், நோட்டு, பேனா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.


Next Story