தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சி அருகே உள்ள காரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமணி என்பவரது தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று சென்றதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனடியாக துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுமார் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு தோட்டத்தில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர், அதனை ஒரு பையில் வைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





