அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை

மயிலாடுதுறை கோட்டத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை தபால் கண்காணிப்பாளர் தகவல்
அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை
Published on

மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை தபால் நிலையங்களிலும், மயிலாடுதுறை-ஆர்.எஸ்., நீடூர், வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில், ஆக்கூர், பொறையாறு, பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி, சட்டநாதபுரம், திருவெண்காடு, மங்கைமடம், ஆணைக்காரன்சத்திரம் மற்றும் ஆச்சாள்புரம் துணை தபால் நிலையங்களிலும் ஆதார் புதிதாக எடுத்தல் மற்றும் புதுப்பித்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் அனைத்து அஞ்சலக வேலை நாட்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com