பிறந்தநாள் கொண்டாடிய ஆண்டாள் கோவில் யானை


பிறந்தநாள் கொண்டாடிய ஆண்டாள் கோவில் யானை
x

ஆண்டாள் கோவில் யானை பிறந்தநாள் கொண்டாடியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜெயமால்யதா யானை உள்ளது. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயது குட்டியானையாக கொண்டு வரப்பட்ட பெண் யானைக்கு ஜெயமால்யதா என பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. தினமும் ஆண்டாள் கோவில் விஸ்வரூப நிகழ்ச்சிகளிலும், பூஜை நிகழ்ச்சிகளிலும் ஆண்டாள், ெரங்க மன்னர் ஊர்வலத்திலும் யானை முன்பு செல்லும். நேற்று இந்த யானைக்கு 21-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்டாள் கோவிலில் யானை மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறந்தநாளையொட்டி பழங்கள் மற்றும் உணவுகளை பொதுமக்கள் வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர்.



Next Story