பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் காட்டில் இருந்து வழிதவறிய குரங்கு ஓன்று அந்தப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து பல்லடம் பா.ஜனதா. வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் அவரப்பாளையம் வந்து வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





