காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் - சீனா


காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் - சீனா
x

கோப்புப்படம்

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்,

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்த சூழலில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து இருநாடுகள் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் தீர்க்க வேண்டும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானதாகவும் தெளிவாகவும் உள்ளது. இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்றில் இருந்து எஞ்சியிருக்கும் பிரச்சினை.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் தொடர்புடைய இருதரப்பு ஒப்பந்தங்களின்படி அமைதியான வழியில் சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட வேண்டும்" என்றார்.


Next Story