100 ரூபாய்க்காக அனைவரின் முன்னும் டான்ஸ் ஆடினேன் – யாஷிகா ஆனந்த்

என் நடனத்தை பார்த்து ரசித்து 100 ரூபாய் கொடுப்பார்கள் என்று நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.
100 ரூபாய்க்காக அனைவரின் முன்னும் டான்ஸ் ஆடினேன் – யாஷிகா ஆனந்த்
Published on

மாடலிங் துறையில் தொடங்கி, சிறிய விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். தமிழில் துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். அதன் பின்னர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி, கழுகு 2, பெஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்துப் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.

இந்த நிலையில், தனது சிறுபருவ அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “எனக்கு பத்து வயது இருக்கும் போது 100 ரூபாய் காசுக்காக அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் முன்னால் லூசுத்தனமாக டான்ஸ் ஆடியிருக்கேன். என் நடனத்தை பார்த்து ரசித்து கை தட்டி 100 ரூபாய் கொடுப்பார்கள். அந்த 100 ரூபாய்க்காக அனைவரின் முன்னாலும் டான்ஸ் ஆடிய நிலைமையும் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறது,” என யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com