பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள் - சேரன்

எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் நடித்துள்ள ‘போர்த் ப்ளோர்’ படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள் - சேரன்
Published on

எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள ‘போர்த் ப்ளோர்’ திரைப்படம், வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் ஆரியின் ‘போர்த் ப்ளோர்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன், பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுவதாக தெரிவித்தார்.

இது குறித்து இயக்குநர் சேரன் பேசும் போது, “திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும். "திருப்பூர் புரொடியூசர்ஸ்" உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம். இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். ‘போர்த் ப்ளோர்’ என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் டைட்டிலே இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும். அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com