

சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் கோவிலுக்கு வந்த அவர், சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார்.
தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். “அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளேன். படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என அவர் கூறினார்.
கோவிலில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.