தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தயாரிப்பு நிறுவனமான கேயுரி புரொடக்சனை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் நித்யா மேனன்
Published on

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகை நித்யா மேனன். இவர் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இட்லி கடை, தலைவன் தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை நித்யாமேனன் தெலுங்கு சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை நித்யா மேனன் அதில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கேயுரி புரொடக்ஷனை தொடங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ எனக்கு, திரைப்படங்களை உருவாக்குவது என்பது வெறும் கதைகளைச் சொல்வதை விட எப்போதும் மேலானது. இது உண்மையான மக்களை இவ்வளவு ஆழமான மட்டத்தில் சென்றடைய முடிவது பற்றியது. அறிவை விட ஆழமானது, சிந்தனை, பகுத்தறிவுக்கு மேலே ஒரு இடம் பெரியது. ஒரு மாற்றத்தைத் தூண்டுவது - படைப்பு செயல்பாட்டில் நான் மூழ்கியிருக்கும் போது எனக்குள்ளும், கவனிக்கும் மற்றவருக்குள்ளும். அமைதியாக அலை அலையாக வரும் மாற்றங்களை உருவாக்குவது.

நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்து வருகிறது. நான் இப்போது படங்களைத் தயாரிக்கும் போதும் அதுவே என் நோக்கமாகவே இருக்கும். நான் உங்களுக்கு கேயுரி புரொடக்ஷனை வழங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நித்யா மேனனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com