ரூ.5 ஆயிரத்தோடு இந்தியா வந்த பெண்....இப்போது 5 நிமிட பாடலுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் - யார் அந்த நடிகை தெரியுமா?

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் இப்போது இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருகிறார்.
The woman who came to India with Rs. 5,000...now earns crores for a 5-minute song - do you know who that actress is?
Published on

சென்னை,

திரையுலகில் அங்கீகாரம் பெற, தோற்றம், திறமையை மட்டுமல்ல, நிறைய அதிர்ஷ்டமும் தேவை. திரை பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். 

அப்படி வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் இப்போது இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருகிறார். வெறும் ரூ.5 ஆயிரத்துடன் இந்தியா வந்த அந்தப் பெண்.. இப்போது 5 நிமிடப் பாடலுக்கு கோடி ரூபாய் வாங்குகிறார். அவர் யார் தெரியுமா..? அவர்தான் நாயகி நோரா பதேஹி.

நோரா பதேஹி பிப்ரவரி 6, 1992 அன்று கனடாவின் மாண்ட்ரீலில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே, அவருக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவர் இந்தியாவுக்கு வந்தார். நோரா தனது வாழ்க்கையை 'ரோர்: டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பன்ஸ்' என்ற இந்தி படத்துடன் தொடங்கினார். பின்னர், 'பாகுபலி: தி பிகினிங்' படத்தில் மனோஹரி மற்றும் 'டெம்பர்' படத்தில் இட்டேஜ் ரெச்சிபோடம்.. போன்ற பாடல்களால் பிரபலமானார்.

இந்தியா வந்தபோது தன்னிடம் வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com