

மேலக்காட்டுவிளை ஐந்து வீட்டு சுவாமிகள் திருக்கோவில் கொடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிகள்
நாளை 20-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு பக்திகானம், 5 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல், 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேகம், 10:30 மணிக்கு சுவாமிகளுக்கு தீபாராதனை, பகல் 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், 12 மணிக்கு சுவாமிகளுக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு பக்திகானம், இரவு 9 மணிக்கு பெரியசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
நாளை காலை 10.30 மணிக்கு வயனவப்பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 11. 30 மணிக்கு அனந்தம்மாள் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு ஆத்திசுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு திருப்புளி ஆழ்வார் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 3 மணிக்கு பெரியபிராட்டி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
நாளை மறுநாள் 21-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 7 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு (அனைத்து சுவாமிகளுக்கும்) அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது.