

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கியின் நாடு முழுவதும் உள்ளன. இந்த வங்கியில் காலியாக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
காலி இடங்கள்: 350
பதவி பெயர்: மார்க்கெட்டிங் ஆபீசர் (நிலை 1) மற்றும் பாரின் எக்ஸ்சேஞ்ச் ஆபீசர் (நிலை Ill)
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.ஏ./பி.ஜி.டி.பி.எம்./பி.ஜி.பி.எம்./பி.ஜி.டி.எம். பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
வயது: 1-1-2026 அன்றைய தேதிப்படி பாரின் எக்ஸ்சேஞ்ச் ஆபீசர் பதவிக்கு 25 முதல் 35 வயது வரையும், மார்க்கெட்டிங் ஆபீசர் பதவிக்கு 22 முதல் 30 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்காணல்
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-2-2026
விண்ணப்பிப்பது எப்படி: https://www.centralbankofindia.co.in/en/recruitments