காஞ்சீபுரம் அருகே, செல்போன் வெடித்து வாலிபர் காயம்

காஞ்சீபுரம் அருகே செல்போன் வெடித்து வாலிபர் காயமடைந்தார்.
காஞ்சீபுரம் அருகே, செல்போன் வெடித்து வாலிபர் காயம்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே கோவிந்தவாடி கிராமம் புதிய காலனியை சேர்ந்தவர் அருள்மொழி (வயது 21). நேற்று காஞ்சீபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அவசர அவசரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை அருள்மொழி உள்பட விவசாயிகள், தார் பாய் போட்டு மூடி கொண்டு இருந்தனர்.

அப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென அருள்மொழி பாக்கேட்டில் வைத்து இருந்த செல்போன் வெடித்தது. இதில் காயமடைந்த அவரை உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com