ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம்
Published on

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5-ம் நாள் இரவில் கருடசேவை நடந்தது.

9-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார்.

காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காலை 11.30 மணிக்கு கோவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது.

விழாவில் ஆழ்வார்திருநகரி ரங்கராமானுஜ ஜீயர், டி.வி.எஸ். அறக்கட்டளை ஆலோசகர்கள் கசங்காத்த பெருமாள், முருகன், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன், தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10-ம் நாளான இன்று (சனிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. 11-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நம்மாழ்வார், ஆச்சாரியர்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இசக்கியப்பன், செயல் அலுவலர் விசுவநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com