

பின்னர் சின்னம்மன் மற்றும் சியாமளா தேவிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு வழிபாடு முடிந்த உடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.