எண்ணூரில் புத்தாண்டை முன்னிட்டு 2 லட்சம் எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு அலங்காரம்

எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் கடற்கரையில் கடலை நோக்கி அமைந்துள்ள சின்னம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 12 மூட்டை மக்காச்சோளம், 2.15 லட்சம் எலுமிச்சை பழம், 11 பெட்டி ஆரஞ்சு பழம் மற்றும் 3 ஆயிரம் சாத்துக்குடி பழங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றை கொண்டு கடந்த 3 நாட்களாக கோவில் வளாகத்தில் அலங்காரம் மற்றும் தோரணங்கள் அமைத்தனர்.
2 லட்சம் எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு அலங்காரம்
2 லட்சம் எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு அலங்காரம்
Published on

பின்னர் சின்னம்மன் மற்றும் சியாமளா தேவிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு வழிபாடு முடிந்த உடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com