

புனே,
புனே மாவட்டம் ஜாதவ்வாடி பகுதியை சேர்ந்தவன் கவுதம் சுதிர் (வயது17). 12-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான். கவுதம் சுதிர் நேற்று முன்தினம் டியூசன் செல்வதாக கூறிவிட்டு நண்பர்களுடன் சாக்கன், மோய் கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றான். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் அவன் நண்பர்களுடன் குளித்தான். அப்போது மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினான்.
நண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கவுதம் சுதிர் தண்ணீரில் மூழ்கி மாயமானான். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாணவனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களாலும் தண்ணீரில் மூழ்கிய மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.