

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறைச்சிகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது.