

சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கடந்த 19-ந் தேதி சீனி பட்டாசு தயாரிக்கும் பகுதியில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் சல்பர் மற்றும் அமோனியம் சேமித்து வைத்திருந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் அந்த அறை தரைமட்டமானது.