திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 36). இங்குள்ள பஜார் தெருவில் மளிகை கடை மற்றும் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சிமெண்டு விற்பனை செய்த ரூ.80 ஆயிரத்தை கடையில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.