

பென்னாகரம்:
பென்னாகரம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் இருந்த மகளை காணவில்லை என பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிலிகுண்டுலுவை சேர்ந்த பொன்னுசாமி மகன் சேட்டு என்கிற அமுல் (வயது 24) என்பவர் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சேட்டுவை கைது செய்தனர்.