அரூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

அரூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் வீட்டில் தனியாக இருந்த போது மத்தியம்பட்டியை சேர்ந்த சிங்காரவேலன் (27) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை, அவர் மிரட்டியுள்ளார். இதனால் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது ஆசிரியரிடம் கூறியுள்ளாள். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தினார். இதையடுத்து சிறுமியின் தாயார் அரூர் அனைத்து மகளிர் பாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com