துபாயில் தவிக்கும் 7 பேரை மீட்டுத்தாருங்கள்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு

துபாயில் தவிக்கும் 7 பேரை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
துபாயில் தவிக்கும் 7 பேரை மீட்டுத்தாருங்கள்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருப்புக்காடு ரமேஷ், நயினாமரைக்கான் சக்திபுரம் சரவணன், கொல்லன்தோப்பு வெள்ளைச்சாமி, கடலாடி அவத்தாண்டை காசி, பனிவாசல் ரமேஷ், நல்லூர் முத்துராமலிங்கம், மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் முகமது கசாலி ஆகியோரின் குடும்பத்தினர் உள்பட மாற்றுத்திறனாளி பெண், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இவர்கள் திரளாக கலெக்டர் நடராஜனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மேற்கண்ட 7 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாய் நாட்டிற்கு சென்றனர். அங்குள்ள நிறுவனத்தில் துப்புரவு பணிக்காக அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு சொன்னபடி நிறுவனத்தில் வேலை கொடுக்காமல் வேறு நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமம் முடிந்துவிட்டதால் வேலை இல்லாமல், சம்பளம் கிடைக்காமல் சாப்பாட்டிற்கே அவதிப்பட்டுஉள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com