

செங்குன்றம்,
சென்னை மாதவரம் பால்பண்ணை 3-வது தெருவை சேர்ந்தவர் முகுந்த ராமானுஜம் (வயது 46). அதே பகுதியில் மணல், செங்கல், ஜல்லி வினியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் கதவை சும்மா சாத்திவிட்டு குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நள்ளிரவில் அவரது வீட்டின் கதவை திறந்து நைசாக உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.1,300 ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.