சேத்துப்பட்டு பஸ் நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியல்

சேத்துப்பட்டு பஸ் நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு பஸ் நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியல்
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

அந்தக் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் தினமும் காலை சேத்துப்பட்டில் இருந்து அரசு பஸ் தடம் எண்:148-ல் பயணம் செய்வார்கள்.

அந்த பஸ் ஒருசில நேரத்தில் திடீரென நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்றும் தெரிகிறது.

இதைக் கண்டித்து மாணவ-மாணவிகள் நேற்று சேத்துப்பட்டு காமராஜர் பஸ் நிலையம் அருகில் ஆரணி சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நேரத்தில் தடம் எண்:148 என்ற பஸ்சை இயக்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.

இதையடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் தடம் எண்:422 பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றனர். இதனால் சேத்துப்பட்டில் நேற்று காலை 9 மணியில் இருந்து 9.30 மணிவரை அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com