திருக்கோவிலூர் அருகே பரபரப்பு காரில் கடத்தி 9 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
திருக்கோவிலூர் அருகே பரபரப்பு காரில் கடத்தி 9 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
Published on

திருக்கோவிலூர்

9 வயது சிறுமி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சம்பவத்தன்று சிறுமி அதே ஊரில் உள்ள பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றாள். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பாரதி என்கிற பார்த்திபன்(வயது 25), வெங்கடேசன் மகன் டிரைவர் பிரபா(27), சுப்ரமணியன் மகன் கோபி(26), அப்பாதுரை மகன் அருள்(24) ஆகிய 4 பேரும் மயக்க மருந்து தடவிய கை குட்டையால் சிறுமியின் முகத்தில் அமுக்கினர்.

பாலியல் பலாத்காரம்

இதில் மயக்கம் அடைந்த சிறுமியை காரில் கடத்தி, காட்டுப்பையூர் கிராமம் அருகே உள்ள இளையபெருமாள் கோவில் பின்பு தூக்கிச் சென்று 4 வாலிபர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம், நாங்கள் 4 பேரும் உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டோம். இதை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து சிறுமியை காரில் அழைத்து கொண்டு, கிராமத்தின் அருகே வந்து விட்டுவிட்டு 4 பேரும் தப்பி சென்றனர்.

இதற்கிடையே நடந்த சம்பவத்தை சிறுமி, தனது தாயிடம் கூறி கதறி அழுதாள்.

4 பேருக்கு வலைவீச்சு

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 9 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com