

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் இந்திரா நகர் அம்பேத்கர் சாலையில் வசிப்பவர் குமரவேல். இவரது மாமியார் சரஸ்வதி (வயது 50). நேற்று முன்தினம் அதிகாலையில் சரஸ்வதி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டுக்கு 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டனர்.
பிறகு பீரோவின் சாவியை வாங்கி கொண்ட அவர்கள், பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு தான் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை என்பதும், நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.