தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

வருகிற ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசி இருப்பதாவது;

Also Read
2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்
தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

”மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி மந்திரி இவரே. இது, இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய விஷயமாகப் பதியப்படும். “

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 10 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, ப. சிதம்பரம், ஒன்பது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com