காஷீமீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் 2 புதிய பயங்கரவாத குழுக்களை உருவாக்கியது

ஜம்மு-காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது பாகிஸ்தான் பெரும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
காஷீமீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் 2 புதிய பயங்கரவாத குழுக்களை உருவாக்கியது
Published on

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழு லஷ்கர்-இ-தெய்பா அமைப்புடன் சேர்ந்து 2 புதிய பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு உருவாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்ட குழு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டி.ஆர்.எஃப்) மற்றும் தெஹ்ரீக்-இ-மிலத்-இ-இஸ்லாமி (டி.எம்.ஐ) ஆகியவை ஆகும்அதில் தி ரெசிஸ்டென்ஸ் பிரான்ட் அமைப்பின் கமாண்டராக அபு அனாஸ் என்பவர் செயல்படுவதும் தெரியவந்துள்ளது.

புதிய பயங்கரவாத குழு தெஹ்ரீக்-இ-மிலாத்-இ-இஸ்லாமி (டி.எம்.ஐ) தளபதி நயீம் ஃபிர்தவுஸ் காஷ்மீரில் செயல்படும் அனைத்து போர்க்குணமிக்க குழுக்களையும் ஒன்றிணைக்குமாறு கேட்டு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு குழுக்களும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் தீவிரமாக செயல்படுகின்றன என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com