பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர்  கைது
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கனக் சந்திர பொர்டொலொய்.

இவர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த சில நாட்களுக்குமுன் பொற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கனக் சந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com