

புதுடெல்லி,
பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இரு தலைவர்களும் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்து வரக்கூடிய சூழலில், ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இத்தகைய சூழலில் டிரம்பும் மோடியும் தொலைபேசி வாயிலாக பேசியிருப்பதால், இரு தலைவர்களும் வர்த்தக விவகாரம்,வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து பேசியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.