கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. 3 பேர் கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெரிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் முற்புதர் பகுதியில் அரைகுறை ஆடையுடன் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். உடனடியாக மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story