இரிடியம் மோசடி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் 6 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இரிடியம் மோசடி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் 6 பேர் கைது
Published on

சேலம்,

ரிசர்வ் வங்கி மூலம் வெளிநாடுகளில் இரிடியம் விற்று பணம் பெற்றுத் தருவதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் ஏராளமானவர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடியில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read
இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி பெண்ணிடம் ரூ.8.45 லட்சம் மோசடி - வாலிபர் கைது
 இரிடியம் மோசடி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் 6 பேர் கைது

இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக பீகாரை சேர்ந்த சோனுகுமார் துபே (வயது 29), தெலுங்கானாவை சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் (35) உள்பட 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com