தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி


தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி
x

தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி, நம் இந்தியத் திருநாட்டின் கொள்கைத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன். நாட்டின் சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த உத்தமர்கள் அனைவரையும் நினைவுகூர்வதுடன், தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story