நீலகிரி: விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் - காய்கறிகள் அழுகி சேதம்

காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி: விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் - காய்கறிகள் அழுகி சேதம்
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் காரட், பீட்ரூட், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் காய்கறிகள் சேதமடைந்துள்ளதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com